Breaking News: தபால் வாக்குப் பதிவு மீண்டும் ஒத்திவைப்பு

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பை மீண்டும் ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அரசியல் கட்சி செயலாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில்  தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் ஏப்ரல் மாதம் 28, 29, 30, 31 மற்றும் 4ஆம் திகதிகளில் தீர்மானிக்கப்பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக தேர்தல் திகதியை பிற்போட வேண்டியுள்ளதாக  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பை, மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 3ஆம் திகதியும் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...

பங்களாதேஷில் இன்று பொதுத்தோ்தல்:இந்தியாவுடனான உறவு இயல்புக்கு திரும்புமா?

அண்டை நாடான பங்களாதேஷில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை...