புதிதாக தெரிவுசெய்யப்பட்ட காதிமார்களுக்கான செயலமர்வு!

Date:

புதிதாக நியமிக்கப்பட்ட காதி நீதிபதிகளுக்கான முழு நாள் பயிற்சி அமர்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை, (12) கண்டியில் டொபாஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இப் பயிற்சி செயலமர்வை இலங்கை காதி நீதிபதிகள் சபை, ஸம் ஸம் பவுண்டேஷனுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, சிறப்பாக திட்டமிடப்பட்ட விளக்கக் காட்சிகள், காதி அமைப்பு மற்றும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் செயல்பாட்டைப் பற்றிய பயிற்சியுடன் கூடிய செயலமர்வாக இருந்தது.

இப் பயனுள்ள நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக இடம்பெற்ற இரு அமர்வுகளை, இலங்கை காதி நீதிபதிகள் மன்றத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். ஏ.எம். ஃபௌஸ், ஸம் ஸம் பவுண்டேஷன் தலைவர், அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனீஃபா, பாடநெறிப் பணிப்பாளர், அஷ்ஷெய்க் அம்ஹர் ஹகம்தீன், மற்றும் காதி சபையின் துணைத் தலைவர் இஃபாம் யஹியா ஆகியோர் நடத்தினார்கள்.

இதுவரை நீதிச் சேவைகள் ஆணைக்குழு 65 பேரில் 55 காதிகளை நியமித்துள்ளது. இவர்களில் 52 காதிமார்கள் இவ்வைபவத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...