விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் சரணடைந்தார்: பிடியாணை வாபஸ் பெறப்பட்டது!

Date:

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று மீளப்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (13) பிடியாணை பிறப்பித்திருந்தார் .

பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தனது சட்டத்தரணியுடன் பிரேரணை விண்ணப்பம் மூலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சுகயீனம் காரணமாக அவரால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு பௌத்தலோக மாவத்தையில் பிரதான வீதிகளை மறித்து மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய போராட்டத்திற்கு விமல் வீரவன்ச மற்றும் ஐவர் தலைமை தாங்கியதாக கறுவாத்தோட்ட பொலிஸார் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...