அக்குறணையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

Date:

கண்டி, அக்குரணையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பிரதேசம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அலவத்துகொட பொலிஸ் அத்தியட்சகரிடம் (OIC) ‘நியூஸ் நவ்’ தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பள்ளிவாசலுக்கு மட்டுமல்லாமல் முழு பிரதேசத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பள்ளிவாசல் அருகில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் பரிசோதனைக்குட்படுத்துவதாகவும் அக்குறணை பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...