ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு!

Date:

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

சொத்துகளுடன் தொடர்புடைய இலஞ்சம், ஊழல் மோசடி குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கண்டறியவும் விசாரணை செய்யவும் வழக்கு தொடரவும் சுயாதீன ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான சந்தர்ப்பம் இதனூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விஸ்தரிப்பதும் மக்களுக்கான தௌிவூட்டலை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

மேலும், இந்த வரைவின் மூலம், புகார் இல்லாவிட்டாலும், விசாரணை நடத்த, சம்பந்தப்பட்ட கமிஷனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு எந்தவொரு தகவல், முறைப்பாடு, அல்லது ஆணைக்குழுவின் சொந்த தேவையின் அடிப்படையிலோ அல்லது ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற வேறு ஏதேனும் முக்கிய விடயத்தின் அடிப்படையிலோ தனது விசாரணைகளை ஆரம்பிக்க முடியும்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...