ஓட்டமாவடியில் 3,000க்கும் மேற்பட்ட கொவிட் உடல்கள் அடக்கம்: கெஹலிய ரம்புக்வெல்ல

Date:

கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்த சுமார் 3,634 பேர் ஓட்டமாவடி புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டதை வெளிப்படுத்திய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அப்போதைய அரசாங்கம் இனவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சபையில் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கொவிட் 19 நோயாளர்களின்  உரிமைகள் தொடர்பான பிரச்சினையை ஆராய நியமிக்கப்பட்ட செயலணியின் உறுப்பினர்களை அரசாங்கம் வேண்டுமென்றே தெரிவு செய்ததாக முன்வைத்த குற்றச்சாட்டை அமைச்சர் நிராகரித்தார்.

“பணிக்குழுவில் ஒரு நபர் மாத்திரமே கொவிட் -19 உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு எதிராக இருந்தார். எனவே, உங்கள் குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியாது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டமாவடியில் 2,992 முஸ்லிம்கள், 287 பௌத்தர்கள், 270 இந்துக்கள் மற்றும் 85 கத்தோலிக்கர்களை உள்ளடக்கிய 2,225 ஆண்களும் 1,409 பெண்களும் புதைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...