புத்தளம் தம்பபண்ணி பிரதேசத்தில் புதிய பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது!

Date:

புத்தளம் தம்பபண்ணி சேற்றுப்பள்ளம் பிரதேசத்தில் மஸ்ஜிதுர் ரய்யான் புதிய பள்ளிவாசல் இன்றையதினம் வியாழக்கிழமை (06) ளுகர் தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் வான் வீதி தக்வா பள்ளியினால் இதற்கான காணி வக்பு செய்யப்பட்டு செரண்டிப் பவுண்டேசன் ரிலீப் அன்ட் டெவலப்மன்ட் (SFRD) துருக்கி நன்கொடையாளரினால் இந்த புதிய மஸ்ஜித் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வில் குறித்த நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில், உலமாக்கள், பொதுமக்கள், மத்ரஸா மாணவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இதன் போது உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரபல கட்டட கலை நிறுவனமான புத்தளம் எச்.எம்.பில்டர்ஸ் நிறுவனம் பள்ளிவாசலை அமைத்து கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...