வெளிநாட்டு தொழிலாளர்களால் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது!

Date:

உத்தியோகபூர்வ வழிகள் மூலம் தொழிலாளர்களால் அனுப்பட்ட பணம் கடந்த மாதம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது.

பெப்ரவரியில், இலங்கைக்கு வெளிநாட்டுப் பணியாளர்களிடமிருந்து 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டது, மார்ச் மாதத்தில் இந்தத் தொகை 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, மார்ச் 2022 இல் இலங்கைக்கு 318.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதன்படி, மார்ச் 2022 உடன் ஒப்பிடுகையில், தொழிலாளர்கள் அனுப்பும் பணமானது கடந்த மாதம் 78.5 சதவீதம் அல்லது 249.9 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு 1,413.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...