அக்குறணையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

Date:

கண்டி, அக்குரணையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பிரதேசம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அலவத்துகொட பொலிஸ் அத்தியட்சகரிடம் (OIC) ‘நியூஸ் நவ்’ தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பள்ளிவாசலுக்கு மட்டுமல்லாமல் முழு பிரதேசத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பள்ளிவாசல் அருகில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் பரிசோதனைக்குட்படுத்துவதாகவும் அக்குறணை பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...