அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன: அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருட்களின் கையிருப்பு தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சின் செயலாளர்  அத்தபத்து தெரிவித்தார்.

பொருட்களை மறைத்து வைத்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட நுகர்வோரை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளைக் குறைப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழு, நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, திரவ முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கான உரிய வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...