அலாஸ்கா மற்றும் அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம்!

Date:

அலாஸ்காவின் கான்ட்வெல்லில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கையில், குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 49.3 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உடனடி சேதங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதே வேலை, அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. அந்தமானின் திக்லிப்பூர் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் சுமார் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலை மீண்டும் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...