எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு!

Date:

QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதிவிட்டுள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இன்று காலை கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து எரிபொருள் தாங்கிகளுக்கும் GPS கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும்.

முதலில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தாங்கி ஊர்திகளுக்கு GPS அமைப்பு பொருத்தப்படும். அதன்பின்னர் அனைத்து தனியார் தாங்கிகளுக்கு அவை பொருத்தப்படும்.

அனைத்து எரிபொருள் நிலையங்களும் குறைந்தபட்சம் 50% சேமிப்பு கொள்ளளவை பராமரிக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...