ஓமான் ஆடை தொழிற்சாலை நிர்வாக பணிப்பாளர் மீது தாக்குதல்: விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்

Date:

கட்டான – ஹல்பே – கோபியவத்த பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாக பணிப்பாளர் கல்ஃபான் அல் ஒபைதானி என்பவர்  மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணை படல்கம பொலிஸாரிடமிருந்து நீக்கப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

படல்கம பொலிசார் இந்த சம்பவத்திற்கு நீதி வழங்கவில்லை எனவும், இந்த சூழ்நிலையில் தொழிற்சாலையொன்றை வெளிநாட்டுக்கு மாற்ற நிர்வாகம் தீர்மானித்துள்ளதாகவும் ஓமானிய தூதுவர் அரசாங்கத்திற்கு அறிவித்ததை அடுத்து இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி ஆடைத்தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது சிலர் தாக்குதல் நடத்தியதுடன் அவரது சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த விசாரணைகள் உரிய முறையில் நடைபெறவில்லை என உரிமையாளர்கள் ஓமானிய தூதுவர் ஊடாக இந்நாட்டு வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்திருந்ததுடன் நீதி கிடைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவோம் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த கும்பல்களால் தாங்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருவதாக ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தாக்கப்பட்ட கல்பான் ஒபைதானி (55 வயது) தற்போது ஸ்ரீ ஜெயவர்தன புர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...