அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான முறைப்பாடு தள்ளுபடி!

Date:

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் தனிப்பட்ட முறைப்பாட்டை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய காலத்தில் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தாக்கல் செய்த பூர்வாங்க ஆட்சேபனைகளை பரிசீலித்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல வழக்கை நிராகரித்தார்.

தீர்ப்பை வழங்கிய மாஜிஸ்திரேட், முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக குற்றஞ்சாட்டுவதற்கு போதுமான தகவல்கள் புகார்தாரரால் முன்வைக்கப்படவில்லை என்றார்.

2014ஆம் ஆண்டு மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவார்ட் கப்ரால், அமைச்சரவையின் அனுமதியின்றி ஐஎஸ் பயங்கரவாதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாக முறைப்பாட்டாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...

ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஷூரா சபை சந்திப்பு

ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய...

நாட்டில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...