கந்தளாய் – அக்போபுர புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரதம் தடம் புரண்டதில் இரண்டு புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.