புத்தளம் தம்பபண்ணி பிரதேசத்தில் புதிய பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது!

Date:

புத்தளம் தம்பபண்ணி சேற்றுப்பள்ளம் பிரதேசத்தில் மஸ்ஜிதுர் ரய்யான் புதிய பள்ளிவாசல் இன்றையதினம் வியாழக்கிழமை (06) ளுகர் தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் வான் வீதி தக்வா பள்ளியினால் இதற்கான காணி வக்பு செய்யப்பட்டு செரண்டிப் பவுண்டேசன் ரிலீப் அன்ட் டெவலப்மன்ட் (SFRD) துருக்கி நன்கொடையாளரினால் இந்த புதிய மஸ்ஜித் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வில் குறித்த நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில், உலமாக்கள், பொதுமக்கள், மத்ரஸா மாணவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இதன் போது உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரபல கட்டட கலை நிறுவனமான புத்தளம் எச்.எம்.பில்டர்ஸ் நிறுவனம் பள்ளிவாசலை அமைத்து கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...