ரைஸ் குக்கரின் மூடியால் முகத்தில் சூடு வைத்த தந்தை!

Date:

ரைஸ் குக்கரின் மூடியால் தந்தையொருவர் தனது 16 வயது மகளின் முகத்தில் சூடு வைத்த சம்பவமொன்று பின்வத்த, வடுபசல் வத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பின்வத்த, வடுபசல் வத்த பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி தீக்காயங்களுடன் நேற்று (05) இரவு தனது தாயுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 7.45 மணியளவில் சிறுமி சோறு சமைத்துக் கொண்டிருந்தபோது, வீட்டிற்கு வந்த தந்தை ரைஸ் குக்கரின் மூடியை திறந்து பார்த்து ஏன் இவ்வளவு சோறு சமைக்கிறீர்கள் என்று கேட்டு கொதித்துக் கொண்டிருந்த ரைஸ் குக்கரின் மூடியால் மகளின் முகத்தில் சூடு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகம் மற்றும் கன்னங்களில் தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சந்தேக நபரான தந்தையை கைது செய்ய பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...