வெளிநாட்டு தொழிலாளர்களால் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது!

Date:

உத்தியோகபூர்வ வழிகள் மூலம் தொழிலாளர்களால் அனுப்பட்ட பணம் கடந்த மாதம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது.

பெப்ரவரியில், இலங்கைக்கு வெளிநாட்டுப் பணியாளர்களிடமிருந்து 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டது, மார்ச் மாதத்தில் இந்தத் தொகை 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, மார்ச் 2022 இல் இலங்கைக்கு 318.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதன்படி, மார்ச் 2022 உடன் ஒப்பிடுகையில், தொழிலாளர்கள் அனுப்பும் பணமானது கடந்த மாதம் 78.5 சதவீதம் அல்லது 249.9 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு 1,413.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...