வெளிநாட்டு தொழிலாளர்களால் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது!

Date:

உத்தியோகபூர்வ வழிகள் மூலம் தொழிலாளர்களால் அனுப்பட்ட பணம் கடந்த மாதம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது.

பெப்ரவரியில், இலங்கைக்கு வெளிநாட்டுப் பணியாளர்களிடமிருந்து 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டது, மார்ச் மாதத்தில் இந்தத் தொகை 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, மார்ச் 2022 இல் இலங்கைக்கு 318.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதன்படி, மார்ச் 2022 உடன் ஒப்பிடுகையில், தொழிலாளர்கள் அனுப்பும் பணமானது கடந்த மாதம் 78.5 சதவீதம் அல்லது 249.9 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு 1,413.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...