அக்குறணையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

Date:

கண்டி, அக்குரணையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பிரதேசம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அலவத்துகொட பொலிஸ் அத்தியட்சகரிடம் (OIC) ‘நியூஸ் நவ்’ தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பள்ளிவாசலுக்கு மட்டுமல்லாமல் முழு பிரதேசத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பள்ளிவாசல் அருகில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் பரிசோதனைக்குட்படுத்துவதாகவும் அக்குறணை பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...