பாடசாலை சீருடை விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

Date:

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட சீருடை துணி விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை உள்ளூர் விநியோகஸ்தர்களால் வழங்கப்பட்ட 3,831,000 மீட்டர் சீருடை துணியில் 3,561,000 மீட்டர் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27,000 மீட்டர் சீருடை துணி காலி, களுத்துறை மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் இறுதிக் கட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை சீருடைக்கான தேவை 12,694,000மீட்டர் எனவும், 4.2 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர் பிக்குகளுக்கு இது விநியோகிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...