புத்தளத்தைச் சேர்ந்த பிரபல மார்க்க அறிஞர் அஷ்.எச்.அப்துன் நாசர் ரஹ்மானி சர்வதேச அரபு மொழிக் கவிதை நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்!

Date:

அரபு அல்லாத நாடுகளில் அரபுக் கவிதையின் நிலவரம் பற்றிய ஆய்வரங்கொன்று அண்மையில் சவூதி அரேபிய  மதீனா நகரில் இடம்பெற்றது.

அரசு மொழி பேசாத நாடுகளின் அரபு மொழியில் கவிதை படிக்கின்ற திறமைப் பெற்ற கவிஞர்களுக்கான இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துன் நாசர் ரஹ்மானி என்பவர் கலந்துகொண்டு பரிசில்களும் விருதையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை இந்நிகழ்வில் உலக நாடுகளிலிருந்து பல அரபுக் கவிஞர்கள் கருத்தாளர்களாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

புத்தளத்திலிருந்து கருத்தாளராக அழைக்கப்படிருந்த அப்துன் நாசர் ரஹ்மானி ஹஸ்ரத் அவர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

அரபு மொழி பேசாதா ஒரு நாடு என்ற வகையில் இலங்கையைச் சேர்ந்த அறிஞர்  இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தமை முஸ்லிம் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தரும் விடயமாகும்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...