இந்த வருடம் ஜூலை மாதம் மின்சார விலை மீளாய்வு மற்றும் திருத்தம் செய்யப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம், 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அரசாங்க கொள்கை மற்றும் அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைய, செலவின பிரதிபலிப்பு விலை பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் மின்சார விலைகள் திருத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின் விலையை ஆண்டுக்கு இருமுறை மறுஆய்வு செய்து திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.