மதங்களை அவமதித்ததாகக் கூறப்படும் நடாஷா எதிரிசூரிய கைது!

Date:

பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய, நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)  நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடாஷா எதிரிசூரிய தெரிவித்த கருத்து ஒன்றின் பின்னணியிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நடாஷா எதிரிசூரிய பௌத்த மதத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்து வணக்கத்துக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் நேற்று (27) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எவ்வாறாயினும், பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக விமர்சிக்கப்பட்ட நடாஷா எதிரிசூரிய, பகிரங்க மன்னிப்பு கோரியதோடு, அது தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளிகளையும் நீக்கியுள்ளார்.

Popular

More like this
Related

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...