இலங்கை ஜூன் மாதத்திற்குள் இறக்குமதி தடையை நீக்கும்: ஐரோப்பிய ஒன்றியம்

Date:

தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை ஜூன் மாதத்திற்குள் முன்வைக்க இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்திற்க் கொண்டு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு (EU) அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 25 நடைபெற்ற இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 25ஆவது அமர்வின் போது இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயின் விளைவாக 2020 இன் பிற்பகுதியில் இறக்குமதிக்கு தடையை விதித்த இலங்கை பின்னர் பொருளாதார நெருக்கடி காரணமாக தடையை நீடித்தது.

இலங்கையின் இரண்டாவது பாரிய வர்த்தகப் பங்காளியான ஐரோப்பிய ஒன்றியம், இந்தத் தீர்மானத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், தனது வர்த்தகப் பங்காளிகளுக்கு நியாயமற்றதாகக் கருதப்படும் பாதுகாப்புவாத வர்த்தகக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்லுமாறு இலங்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மார்ச் மாதத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்ற கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வெளிப்படுத்தியது.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...