”ரமழானில் கதை சொல்லும் நேரம்” போட்டி பரிசளிப்பு: பிரதம அதிதியாக நிவ்ஸ் நவ் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ். அப்துல் முஜீப்

Date:

அல்ஆலிமா டொக்டர் மரீனா தாஹா ரிபாயின் ”ரமழானில் கதை சொல்லும் நேரம்” நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் 2 ஆம் திகதி மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

ரமழானை பிரயோசனமுள்ளதாகக் கழிக்கும் வகையில் அல்குர்ஆன் கூறும் கதைகளை சிறுவர்களும் பெரியவர்களும் விரும்பிக் கேட்கும் விதமாக டொக்டர் மரீனா தாஹா ரிபாய் ரமழானின் ஒவ்வொரு நாளும் நடத்தியிருந்தார்.

ஒவ்வொரு நாள் கதை முடிவிலும் பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர்.

டொக்டர் மரீனாவுடைய பெண்கள் குழுவினர் இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.

மெய்நிகழ் வழியாக நடைபெறவுள்ள இந்தப் பரிசளிப்பு வைபவத்தில் நிவ்ஸ் நவ் இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் நிறைவேற்று அதிகாரியும் ஊடகவியலாருமான அஷ்.அப்துல் முஜீப் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

டொக்டர் மரீனாவுடைய ”ரமழானில் கதை சொல்லும் நேரம்” நிகழ்ச்சி முஸ்லிம் சமூகத்தின் முன்னணி ஊடகமான நிவ்ஸ் நவ்விலும் ” ஸ்டோரி டைம் வித் ஆன்டி மரீனா” என்ற பெயரில் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகியது.

Join Zoom Meeting:-

https://us02web.zoom.us/j/87625307535?pwd=TkxsRk5BVHVUK3lTUUFoUzNaYTlEUT09

Meeting ID: 876 2530 7535

Passcode: 052509

On News Now- Facebook Link:-

https://web.facebook.com/tamil.newsnow.lk

Youtube Link:-

https://www.youtube.com/channel/UCtLH-l9DE72RfXJIjLWP68A

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...