வெசாக் காலப்பகுதியில் கொவிட் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றவும்

Date:

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் கொவிட் தொடர்பான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு தொற்றுநோயியல் திணைக்களத்தின் வைத்தியர் சமித கினிகே மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் சுமார் ஏழு கொவிட் -19 நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். கொவிட் வைரஸ் பரவி வரும் நிலையில், மக்கள் நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெசாக் பண்டிகையின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தால், வைரஸ் பரவல் அதிகரிக்கலாம் என்றும், மேலும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், மக்கள் நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பங்களாதேஷ் பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று ( 12) நடைபெற்றது. முன்னாள்...

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...