உள்நாட்டு பிரச்சினைகளை ஜெனிவாவுக்கு கொண்டு செல்லப்போவதில்லை: அரசாங்கம் தீர்மானம்

Date:

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளை தொடர்ந்தும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எடுத்துச் செல்வதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் ஸ்தாபித்துள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக உள்நாட்டு பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி அவற்றுக்கு தீர்வை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி அசங்க குணவர்தன செயற்பட்டு வருகிறார்.

வருடந்தோறும் ஜூன் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் ஆணைக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதுடன் அது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் எடுக்கும் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இது இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கை என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...