“எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று போதுமான எரிபொருள் இருப்பு கிடைக்கும்”

Date:

இன்று (04) அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான எரிபொருள் இருப்பு அனுப்பப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் இந்தியன் ஒயில் கம்பனிக்கு சொந்தமான பவுசர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், 121 பெட்ரோல் நிலையங்கள் மே 27 முதல் 31 வரை எந்த ஆர்டரையும் வைக்கவில்லை என்றும், பல பெட்ரோல் நிலையங்கள் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க போதுமான ஆர்டர்களை வைக்கவில்லை என்றும் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த விதிமுறைகளை மீறிய எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ட்விட்டர் செய்தி வருமாறு;

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...