ஓமான் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இரத்த தான நிகழ்வு

Date:

கொழும்பிலுள்ள ஓமான் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் இரத்த தான  நிகழ்வொன்று கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு  தேசிய இரத்த வங்கியில் இடம்பெற்றது.

சர்வதேச இரத்த தான தினத்தினையொட்டியே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி ரசீட், தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஓமான் வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் உலகளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஓமான் தூதுவராலயங்களினாலும் மேற்கொள்ளப்படும் மனிதாபிமானப் பணியின் ஒரு அம்சமாகவே இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...