ஓமான் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இரத்த தான நிகழ்வு

Date:

கொழும்பிலுள்ள ஓமான் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் இரத்த தான  நிகழ்வொன்று கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு  தேசிய இரத்த வங்கியில் இடம்பெற்றது.

சர்வதேச இரத்த தான தினத்தினையொட்டியே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி ரசீட், தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஓமான் வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் உலகளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஓமான் தூதுவராலயங்களினாலும் மேற்கொள்ளப்படும் மனிதாபிமானப் பணியின் ஒரு அம்சமாகவே இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...