தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபரில்..!

Date:

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு (2023) ஜூலை 6 ஆம் திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை (2023) ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு அரச அல்லது அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் (2023) சித்திபெறும் மாணவர்கள் ஜனவரி 2024 முதல் புலமைப்பரிசில்களைப் பெறத் தகுதி பெறுவார்கள். இருப்பினும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் 2024 ஜனவரி 31 ஆம் திகதிக்குள் 11 வயதுக்குக் குறைவான மாணவர்கள் மட்டுமே உதவித்தொகையைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...