உள்நாட்டு பிரச்சினைகளை ஜெனிவாவுக்கு கொண்டு செல்லப்போவதில்லை: அரசாங்கம் தீர்மானம்

Date:

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளை தொடர்ந்தும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எடுத்துச் செல்வதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் ஸ்தாபித்துள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக உள்நாட்டு பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி அவற்றுக்கு தீர்வை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி அசங்க குணவர்தன செயற்பட்டு வருகிறார்.

வருடந்தோறும் ஜூன் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் ஆணைக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதுடன் அது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் எடுக்கும் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இது இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கை என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...