“எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று போதுமான எரிபொருள் இருப்பு கிடைக்கும்”

Date:

இன்று (04) அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான எரிபொருள் இருப்பு அனுப்பப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் இந்தியன் ஒயில் கம்பனிக்கு சொந்தமான பவுசர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், 121 பெட்ரோல் நிலையங்கள் மே 27 முதல் 31 வரை எந்த ஆர்டரையும் வைக்கவில்லை என்றும், பல பெட்ரோல் நிலையங்கள் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க போதுமான ஆர்டர்களை வைக்கவில்லை என்றும் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த விதிமுறைகளை மீறிய எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ட்விட்டர் செய்தி வருமாறு;

Popular

More like this
Related

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...