கல்முனையில் மாட்டிறைச்சிக்கு தற்காலிக தடை

Date:

தற்போது நாட்டில் மாடுகளிடையே பரவி வரும் தோல் கட்டி நோய் காரணமாக கல்முனை மாநகர சபை எல்லையினுள் நேற்று (08) தொடக்கம் எதிர்வரும் ஒரு வார காலத்துக்கு இறைச்சிக்காக மாடு அறுப்பதும் மாட்டிறைச்சி விற்பதும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சில மாடுகள் கல்முனை பிராந்தியத்திலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அது ஏனைய மாடுகளுக்கு விரைவாக பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தெரிவித்துள்ளார்.

அதன்படி, கல்முனை மாநகர சபை எல்லையினுள் குறித்த காலப்பகுதியில் மாடு அறுத்தல், மாட்டிறைச்சியை விற்பனை செய்தல் மற்றும் மாட்டிறைச்சியை பொதி செய்தல் என்பன தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...