கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு நுழைந்த நபரால் பரபரப்பு!

Date:

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் நுழைய முயன்ற நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேவாலயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற இம்தியாஸ் என்ற நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள் பிரவேசிக்க வந்த போது பிரதான வாயிலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...