தயாராகும் புதிய தொழிலாளர் சட்டமூலத்துக்கான பிரேரணை!

Date:

தற்போதைய தொழிலாளர் சட்டத்தின் குறைபாடுகளை திருத்தும் வகையில் புதிய தொழிலாளர் சட்டமூலத்துக்கான பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சட்டமூலத்தை தொழிலாளர் ஆலோசனை சபையில் விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார, இதனைத் தெரிவித்தார்.

இப்பிரேரணையின்படி ஆட்சேர்ப்பு அல்லது பணியிடத்தில் ஓர் ஊழியருக்கு எதிரான பாகுபாட்டை தடுக்க சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பணியாளர்கள், அனைத்துப் பணியிட துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்ட விதிகளை அறிமுகப்படுத்துதல், பின்னர் ஊழியர்களின் விருப்பத்துக்கேற்ப 5 நாள் வாரம் மற்றும் நெகிழ்வான வேலை நேரங்களை அறிமுகப்படுத்துதல், பகுதிநேர வேலையில் ஈடுபடுவதற்கு தொடர்புடைய சட்ட விதிகளை உருவாக்குதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரவில் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு சட்டம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தொழிலாளர் சட்ட மாதிரி, தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அது சட்டமாக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...