தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபரில்..!

Date:

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு (2023) ஜூலை 6 ஆம் திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை (2023) ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு அரச அல்லது அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் (2023) சித்திபெறும் மாணவர்கள் ஜனவரி 2024 முதல் புலமைப்பரிசில்களைப் பெறத் தகுதி பெறுவார்கள். இருப்பினும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் 2024 ஜனவரி 31 ஆம் திகதிக்குள் 11 வயதுக்குக் குறைவான மாணவர்கள் மட்டுமே உதவித்தொகையைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...