மனைவி, பிள்ளைகளை மட்டும் இலங்கைக்கு அனுப்பிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Date:

பௌத்த சமயம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் அவதூறு ஏற்படும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் நேற்றிரவு 10.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் அவருக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அவர் நாடு திரும்பாது, தமது மனைவி மற்றும் பிள்ளைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...