வடக்கில் இனங்களுக்கு இடையில் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சி:பலாங்கொட காசியப்ப தேரர்

Date:

வடக்கில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இனவாத்தை ஏற்படுத்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக பலாங்கொட காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

திரியாய், குருந்தூர்மலை விகாரைகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

திரியாய் விகாரையை சுற்றி தமிழ் மக்களின் வயல் காணிகள் இருப்பதாக சாணக்கியன் ராசமாணிக்கம் சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது. அந்த பிரதேசத்தில் வயல் காணிகள் எதுவுமில்லை.

ஆயிரணக்கான வருட வரலாற்றுக்கு உரிமை கோரும் இந்த பிரதேசத்தில் கடந்த போர் காலத்தில் சிலர் காணிகளை கைப்பற்றி இருந்தாலும் பௌத்த வழிப்பாட்டு தலங்கள் இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் அங்கு இருக்கின்றன.

அரச வளங்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

பௌத்த சமயத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக மேலும் சிலருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் காசியப்ப தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...