விமல் வீரவன்சவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு

Date:

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக ஐக்கிய இளைஞர் சக்தி, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

வீரவன்ச எழுதி வெளியிட்டுள்ள ‘நவய செங்கவுனு கதாவ’ என்ற நூல் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடந்த போது இராணுவத்தின் நிலைப்பாடு சம்பந்தமாக வீரவன்ச, பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும் இராணுவம் ஜனாதிபதி உத்தரவுகளை ஏற்கவில்லை எனவும் அமெரிக்க தூதுவரின் தாளத்திற்கு ஏற்றபடி ஆடியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் ஐக்கிய இளைஞர் சக்தி குறிப்பிட்டுள்ளது.

சில இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதே விமல் வீரவன்சவின் நூலுக்கு பின்னால் இருக்கும் நோக்கம் எனவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...