இராணுவத்தினர் வசமிருந்த காணி 32 வருடங்களுக்கு பின் கையளிப்பு !

Date:

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி 32 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலக பிரிவில் 8.6 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், கிரான் பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

59 உரிமையாளர்களிடம் அவர்களின் காணிகள் இன்று கையளிக்கப்பட்டன.

இந்த காணிகளை 1991 ஆம் ஆண்டிலிருந்து இராணுவம் கையகப்படுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

53 ஆவது வருடத்தை பூர்த்தி செய்யும் இஸ்லாமிய கலாபீடம் ஜாமியா நளீமியா!

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கு கணசமான பங்களிப்பை வழங்கும் ஒரு நிறுவனமாக...

பலாந்தை முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசும் “பலன்புர முஸ்லிம்கள்” நூல் வெளியீடு செப்டம்பரில்

களுத்துறை மாவட்டம், அகலவத்தை தேர்தல் தொகுதிக்குட்பட்ட வரலாற்று  சிறப்புமிக்க பலாந்தை பிரதேச...

செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சாரதிகளும் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது ஏற்கனவே...

இஸ்ரேலிய அமைச்சர் இடாமர் பென் க்வீர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்: அமெரிக்க செனட்டர் ஜாக்கி ரோசன் வலியுறுத்தல்

காசாவில் தினமும் இரவு பல பாலஸ்தீனர்களை இஸ்ரேலியப் படைகள் கொல்ல வேண்டும்...