ஊடக அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக ஐ.நா தலையீடு வேண்டும்: சிவில் ஆர்வலர்கள்

Date:

ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊடாக ஊடகங்களை ஒடுக்க அரசாங்கம் முயற்சிப்பதால் உடனடியாக தலையிடுமாறு மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரஜைகள் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையான கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றுள்ளதால் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இணைந்து அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கும் சட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உடனடி தலையீட்டை நாட வேண்டும் என மக்கள் போராட்ட பிரஜைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார தெரிவித்துள்ளார்.

“மக்கள் தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவதற்கான ஒரே வழி ஊடகம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க ஹிட்லர், முசோலினி அல்லது போல்போட் போன்றவராக இருக்க விரும்புகிறாரா என நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்.

“ஊடகங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் பொதுவான கொள்கையை கடைப்பிடிக்கிறது. சர்வாதிகாரிகளை என்றென்றும் ஆட்சி செய்ய முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடித்தனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...