தங்கம் கடத்திய அலி சப்ரிக்கு இல்லாமல் போகும் ‘VVIP’ வரப்பிரசாதம்!

Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விஷேட பிரமுகர்  வெளியேறல் பகுதியூடாக தங்கம்  மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கடத்தி வந்து மாட்டிக்கொண்ட, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு உரித்தான  அதி முக்கிய பிரமுகர் விஷேட வரப்பிரசாதத்தை (VVIP Facility) இரத்து செய்ய தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதற்கான ஆலோசனைகளை சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன  பாராளுமன்ற அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

அலி சப்ரி ரஹீம், தங்கம் கடத்தி மாட்டிக்கொண்ட பின்னர், அபாரதம் செலுத்திவிட்டு விடுதலையாகியுள்ளார்.

இது தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர்  சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந் நிலையில் அது தொடர்பில் ஆராய்ந்துள்ள சபாநாயகர், குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விமான நிலையத்தில் கிடைக்கும்  அதி விஷேட பிரமுகர் வரப்பிரசாதத்தை  ரத்து செய்ய  உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது சிவில் விமான சேவைகள்   திணைக்களத்தின் நிலைப்பாட்டினையும் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...