பாகிஸ்தான் கடற்படை கப்பல் ‘ஷாஜஹான்’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

Date:

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான (பிஎன்எஸ்) ‘ஷாஜஹான்’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

வருகை தந்துள்ள கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

PNS ‘ஷாஜஹான்’ என்பது 134.1 மீ நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது 169 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.

அக்கப்பலின் கெப்டனாக அட்னான் லகாரி டி உள்ளார்.

கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்துள்ளார்.

கப்பல் தங்கியிருக்கும் போது, ​​​​இரண்டு கடற்படையினருக்கு இடையிலான ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பணியாளர்கள் பங்கேற்பார்கள் என கடற்படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவர்கள் நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தலங்களுக்கும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, ‘ஷாஜஹான்’ நாளை நாட்டில் புறப்பட்டு செல்லவுள்ளது.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...