வைத்தியசாலைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது!

Date:

மாதாந்த மின் கட்டணம் செலுத்தப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என கூறப்படும் மருத்துவமனையின் செலுத்தப்படாத கட்டணங்கள் குறித்து பல்வேறு பிரிவுகளின் சலசலப்புக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் சுமார் 3 பில்லியன் ரூபாவை மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை இலங்கை மின்சார சபைக்கு 339 மில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்த வேண்டும்.

சுகாதார அமைச்சு 120 மில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபைக்கு செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பொது திறைசேரி எஞ்சிய தொகையை மின்சார சபைக்கு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கிடையில், சுகாதார நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள பல பில்லியன்கள் இருந்தாலும், பொதுமக்களுக்கு அளிக்கும் சேவையை கருத்திற்க் கொண்டு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...