பசிலின் மல்வானை ஆடம்பர வீடு தற்போது அரசுக்கு சொந்தமானது: நீதியமைச்சர்

Date:

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கூறப்பட்ட மல்வானை பிரதேசத்தில் உள்ள ஆடம்பர வீடு தற்போது அரசுக்கு சொந்தமானது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மல்வானையில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த வீடு தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

குறித்த வீட்டை நீதியமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மல்வானையில் உள்ள இந்த சொத்துக்கு எவரும் உரிமை கோரவில்லை என பத்திரிகைகள் மூலம் அறிந்துக்கொண்ட பின்னர், அதனை நீதியமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்காக அண்மையில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வீடு அரசுக்கு சொந்தமானது என்று தெரியாமல், போராட்டகாரர்கள் அதற்கு தீ வைத்திருக்கலாம் எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...