வைத்தியசாலைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது!

Date:

மாதாந்த மின் கட்டணம் செலுத்தப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என கூறப்படும் மருத்துவமனையின் செலுத்தப்படாத கட்டணங்கள் குறித்து பல்வேறு பிரிவுகளின் சலசலப்புக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் சுமார் 3 பில்லியன் ரூபாவை மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை இலங்கை மின்சார சபைக்கு 339 மில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்த வேண்டும்.

சுகாதார அமைச்சு 120 மில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபைக்கு செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பொது திறைசேரி எஞ்சிய தொகையை மின்சார சபைக்கு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கிடையில், சுகாதார நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள பல பில்லியன்கள் இருந்தாலும், பொதுமக்களுக்கு அளிக்கும் சேவையை கருத்திற்க் கொண்டு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...

இன்று முதல் மின்சார சபையில் மாற்றம்

இலங்கை மின்சார சபையின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் இன்று முதல் 6...

தேசிய நலன் கருதி PSTA-வைக் கைவிடுமாறு ஜனாதிபதியிடம் 14 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தல்!

(தேசிய சூரா சபையின் (NSC) பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம்....