பசிலின் மல்வானை ஆடம்பர வீடு தற்போது அரசுக்கு சொந்தமானது: நீதியமைச்சர்

Date:

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கூறப்பட்ட மல்வானை பிரதேசத்தில் உள்ள ஆடம்பர வீடு தற்போது அரசுக்கு சொந்தமானது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மல்வானையில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த வீடு தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

குறித்த வீட்டை நீதியமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மல்வானையில் உள்ள இந்த சொத்துக்கு எவரும் உரிமை கோரவில்லை என பத்திரிகைகள் மூலம் அறிந்துக்கொண்ட பின்னர், அதனை நீதியமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்காக அண்மையில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வீடு அரசுக்கு சொந்தமானது என்று தெரியாமல், போராட்டகாரர்கள் அதற்கு தீ வைத்திருக்கலாம் எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...