லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளில் மாற்றம் !

Date:

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

இந்த விலை மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ் தெரிவித்தார்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை மாற்றத்திற்கு அமையவே லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் குறித்த எரிபொருள் வகைகளின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...