முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யக் கோரி தமிழ் அமைப்புகள் முறைப்பாடு

Date:

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள சில தமிழ் அமைப்புகள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடுகளை செய்துள்ளன.

தெற்கில் உள்ள சிங்கள மக்களை வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக ஆத்திரத்தை தூண்டும் வகையில் முன்னாள் அமைச்சர் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனால், தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மனரீதியான பாதிப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் தலைகளை களனிக்கு கொண்டு செல்ல போவதாக முன்னாள் அமைச்சர் கூறியிருப்பதன் மூலம் அவர் தமிழ் மக்களுக்கு மறைமுகமான கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முறைப்பாடுகளில் கோரப்பட்டுள்ளன.

தமிழ் மக்களுக்கு எதிரான இந்த கருத்தால், நாட்டுக்குள் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் நாட்டுக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் சட்டத்திற்கு அமைய சிறுபான்மை மக்களை தாழ்ந்தவர்களாக கருதி அவர்களை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிட முடியாது என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...