முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யக் கோரி தமிழ் அமைப்புகள் முறைப்பாடு

Date:

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள சில தமிழ் அமைப்புகள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடுகளை செய்துள்ளன.

தெற்கில் உள்ள சிங்கள மக்களை வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக ஆத்திரத்தை தூண்டும் வகையில் முன்னாள் அமைச்சர் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனால், தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மனரீதியான பாதிப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் தலைகளை களனிக்கு கொண்டு செல்ல போவதாக முன்னாள் அமைச்சர் கூறியிருப்பதன் மூலம் அவர் தமிழ் மக்களுக்கு மறைமுகமான கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முறைப்பாடுகளில் கோரப்பட்டுள்ளன.

தமிழ் மக்களுக்கு எதிரான இந்த கருத்தால், நாட்டுக்குள் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் நாட்டுக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் சட்டத்திற்கு அமைய சிறுபான்மை மக்களை தாழ்ந்தவர்களாக கருதி அவர்களை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிட முடியாது என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...