உணவுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்: உணவக உரிமையாளர்கள்

Date:

அனைத்து உணவுகளின் விலைகளும் அடுத்த சில தினங்களுக்குள் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

ஏற்கனவே உணவகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உணவுகளின் விலைகளை மீண்டும் அதிகரிப்பதால், இந்த நஷ்டம் மேலும் பல மடங்கு அதிகரிக்கலாம்.

அப்படி நடந்தால், உணவகங்களை மூடிவிட நேரிடும் எனவும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த கழிவறை வசதிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதனையும் நிறுத்த நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் மேலும் கூறியுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும்...

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...